sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் டிக்கெட் கவுன்டர் திறக்க எதிர்பார்ப்பு

/

சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் டிக்கெட் கவுன்டர் திறக்க எதிர்பார்ப்பு

சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் டிக்கெட் கவுன்டர் திறக்க எதிர்பார்ப்பு

சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் டிக்கெட் கவுன்டர் திறக்க எதிர்பார்ப்பு


ADDED : மார் 24, 2024 01:01 AM

Google News

ADDED : மார் 24, 2024 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார் : சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் கூடுதல் டிக்கெட் கவுன்டர்களை திறக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியூர் சென்று வருகின்றனர். இதனால் காலை மாலை நேரங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பயணிகள் டிக்கெட் எடுக்கும் நிலை உள்ளது.

ஒரே டிக்கெட் கவுண்டரில் பொதுப் பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளும் தட்கல், முன்பதிவு செய்ய டிக்கெட் எடுப்பவர்களும் நின்று டிக்கெட் பெற வேண்டிய நிலை உள்ளது.

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மிக அதிக அளவில் பயணிகள் ரயில்வே ஸ்டேஷன் வருகின்றனர். இது போன்ற நாட்களில் பொதுப் பெட்டியில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் எடுக்க முடியாமல் போவதால் ரயில்களை தவறவிடும் சம்பவம் நடக்கிறது.

சிலர் டிக்கெட் எடுக்காமல் பொதுப் பெட்டியில் ஏறி அபராதம் கட்டும் நிலை ஏற்படுகிறது. தட்கல், முன்பதிவு செய்து டிக்கெட் எடுக்க வரும் பயணிகளும் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

எனவே சாத்துார் ரயில்வே ஸ்டேஷனில் இரண்டு கவுன்டர்கள் மூலம் பயணிகளுக்கு டிக்கெட் வழங்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us