ADDED : ஜூலை 22, 2024 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி வட்டார வேளாண் துறை அட்மா திட்டத்தின் கீழ், பண்ணை குட்டைகளில் கூட்டு மீன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.
உதவி இயக்குனர் செல்வராணி தலைமை வகித்தார். வேளாண் அலுவலர் அருள்மொழி முன்னிலை வகித்தார். மாவட்ட மீன்வளத்துறை ஆய்வாளர் சபின், மீன் வளர்ப்பு திட்டங்கள், அரசு வழங்கும் மானியங்கள் குறித்து பேசினார். உதவி அலுவலர் அனிதா, அட்மா திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துக்கருப்பன், சி.சி.டி., பண்ணை மேலாளர் பார்த்தசாரதி, கள அலுவலர்கள் அருண்குமார், கணேசன், விவசாயி சிவசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.