/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருநங்கைகள் தீக்குளிக்க முயற்சி
/
திருநங்கைகள் தீக்குளிக்க முயற்சி
ADDED : மே 10, 2024 04:31 AM
விருதுநகர்: ராஜபாளையம் தளவாய்புரம் ரங்கநாதபுரத்தை சேர்ந்த திருநங்கைகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
சூலக்கரை போலீசார் தடுத்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அவர்கள் கூறியதாவது: நாங்கள் 9 திருநங்கைகள் ரூ.17 லட்சம் கொடுத்து ரங்கநாதபுரத்தில் வீடு வாங்கினோம். அருகே கூரை அமைத்து கால்நடைகள் வளர்க்கிறோம்.
நாங்கள் திருநங்கைகள் என்பதால் அங்குள்ள சிலர் எங்களை வாழவிடாமல் அச்சுறுத்துகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் 30 பேர் கூடி கூச்சலிட்டு பயமுறுத்தினர். இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கோரினர்.