ADDED : மார் 01, 2025 04:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில், திருச்சி நீதிமன்ற ஊழியர் அருண்குமார் தற்கொலைக்கு காரணமான நீதிபதி பாக்கியம் மீது உயர்நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநிலத் துணைத் தலைவர் பால்ராஜ் தலைமை தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சவுந்தரபாண்டியன், மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன், பொருளாளர் வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் , நீதிமன்ற ஊழியர்கள் திரளாக பங்கேற்றனர். மாவட்ட இணை செயலாளர் முத்தையா நன்றி கூறினார்.