ADDED : மே 28, 2024 05:33 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்தூர், : ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் 281 ஆவது எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது.
தலைவர் கோதையூர் மணியன் தலைமை வகித்தார். எழுத்தாளர் பொன்முருகன், மோகன் இசை பாடல்கள் பாடினர். எழுத்தாளர் தேவிபாலா குணசேகரனின் கவிதை நூல்களை புலவர் சிவனனைந்த பெருமாள் உட்பட பலர் விமர்சனம் செய்து பேசினர். எழுத்தாளர் தேவி பாலா ஏற்புரையாற்றினார். அவருக்கு தத்துவ கவிஞர் என்ற விருது வழங்கப்பட்டது. பின்னர் பேராசிரியர் சிவனேசன் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. செயலாளர் அடைக்கலம் நன்றி கூறினார்.
