ADDED : ஏப் 15, 2024 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி,- நரிக்குடி கணையமறித்தான் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் 48. ஆட்டோ டிரைவர். இருஞ்சிறை அருகே ரயில்வே இருப்பு பாதையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதற்கு பணியாளர்களை ஆட்டோவில் ஏற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை பணியாளர்களை ஏற்றுவதற்கு ஆட்டோவில் சென்ற போது தர்மம்- மணிக்கட்டியேந்தல் ரோட்டில் முள்ளிக்குடி பாலம் அருகே ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார். நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

