sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கோயில்களில் ஆவணி அவிட்டம்

/

கோயில்களில் ஆவணி அவிட்டம்

கோயில்களில் ஆவணி அவிட்டம்

கோயில்களில் ஆவணி அவிட்டம்


ADDED : ஆக 20, 2024 06:51 AM

Google News

ADDED : ஆக 20, 2024 06:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் மாவட்ட கோயில்களில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணுால் அணியும் வைபவம் கடைபிடிக்கப்பட்டது. இதில் புரோகிதர்கள், பிராமணர்கள் தங்கள் பூணுாலை புதுப்பித்து அணிந்தனர்.

ஆவணி மாத பவுர்ணமி திதியும், அவிட்ட நட்சத்திரமும் இணைந்து வரும் நாள் ஆவணி அவிட்டமாக கொண்டாடப்படுகிறது. இந்நாள் வேதங்கள் அவதரித்த நாளாகவும், மஹாவிஷ்ணு ஹயக்கிரீவராக அவதரித்த நாளாகவும், வேதங்களை அசுரர்களிடமிருந்து தேவர்கள் மீட்டதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது. ஆவணி அவிட்டத்தில் நீர்நிலைகள், கோவில்கள், திருமண மண்டபங்களில் புரோகிதர்கள் குழுக்களாக அமர்ந்து மந்திரங்களை பாராயணம் செய்து பூணுாலை மாற்றிக்கொள்வர்.

விருதுநகர் அக்ரஹாரத்தெருவில் புரோகிதர் சங்கர் கணேஷ் தலைமையில் நடந்த ஆவணி அவிட்டம் பூணுால் புதுப்பிக்கும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் விருதுநகர் பிராமண ஸமாஜம் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில், ராஜபாளையத்தில் வடக்கு அக்ரஹாரம், தெற்கு, சர்வ சமுத்திர அக்ரஹாரம், கோதண்ட ராமசாமி கோயில், தெற்கு சம்மந்தபுரம் அக்ரஹாரம், அருப்புக்கோட்டை, சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கணபதி பூஜையுடன் துவங்கி காயத்ரி மந்திரத்தை உச்சரித்து தங்கள் பூணுாலை புதுப்பித்து அணிந்தனர்.






      Dinamalar
      Follow us