நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் லோக்சபா தேர்தலில் வாக்காளர்களுக்கு நுாறு சதவீத ஓட்டுப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தி நடந்த தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஜெயசீலன் துவக்கி வைத்தார்.
விருதுநகர் பழைய ஸ்டாண்டில் இருந்து துவங்கி முக்கிய வீதிகள் வழியாக நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் துணை கலெக்டர் பிரேம் குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் அலுவலர் கார்த்திகேயினி உள்பட பலர் பங்கேற்றனர்.

