நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி நடந்த முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்களுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலன் தலைமை வகித்து பேசியதாவது: வளர்ச்சி அடையக்கூடிய ஜனநாயகத்தில் ஓட்டுரிமை என்பது மிக முக்கியமானது. அந்த உரிமை இன்று எல்லாருக்கும் கிடைத்திருக்கிறது. அதை நாம் கவனத்தோடும் முழுமையாகவும் பதிவு செய்ய வேண்டும்.
வேட்பாளர்களுடைய விவரங்களை அறிந்து கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு வேட்பாளரும் வேட்பு மனு தாக்கலின் போது படிவம் 26 தாக்கல் செய்து விடுவர். அவருடைய கல்வி தகுதி, சொத்து விவரம், குற்றப் பின்னணி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும், என்றார்.

