ADDED : மார் 25, 2024 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : சாத்துாரில் லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் ஓட்டு போட வலியுறுத்தியும், என்ஓட்டு விற்பனைக்கு அல்ல என்ற விழிப்புணர்வு வாசகத்துடன் மாணவர்கள் ஊர்வலம் நடந்தது.
தாசில்தார் லோகநாதன் தலைமை வகித்தார். பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மெயின் ரோடு, முக்குராந்தல் ,ரயில்வே பீடர் ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடந்தது. விழிப்புணர்வு வாசகங்களை ஏந்தி மாணவர்கள் பலர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

