ADDED : ஜூன் 29, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் சர்வதேச போதை பொருள் ஒழிப்பு நாளை முன்னிட்டு கே.வி.எஸ்., பள்ளியின் போதை பொருள் ஒழிப்பு மன்றம், என்.சி.சி., முப்படையினர் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
செயலாளர் முரளிதரன் தலைமை வகித்தார். டி.எஸ்.பி., பவித்ரா பங்கேற்று கொடியசைத்து துவக்கிவைத்து பேசினார். ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் முருகேசன் செய்தார்.