ADDED : செப் 01, 2024 04:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரம் செய்து வரும் வணிகர்களுக்கு வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாநகர் நல அலுவலர் சரோஜா முன்னிலை வகித்தார். சுகாதார அலுவலர்கள் சுரேஷ், திருப்பதி, பகவதி பெருமாள், சத்தியராஜ், சுகாதார ஆய்வாளர்கள் அபுபக்கர் சித்திக், முத்துப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.