நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் லோக்சபா தொகுதி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஓட்டு இயந்திரங்கள் அடங்கிய பெட்டிகள் விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லுாரியில் மத்திய ஆயுதப்படை, தமிழக சிறப்பு போலீஸ் படையின் 3 அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜூன் 4 வரை ஓட்டு எண்ணும் மையம் அமைந்துள்ள பகுதி 'சிவப்பு மண்டலம்' என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் டிரோன் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என விருதுநகர் எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

