ADDED : பிப் 22, 2025 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: வங்கிகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவது, பணியாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அனைத்து வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் விருதுநகர் ஸ்டேட் வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் அகில இந்திய வங்கி அலுவலர் சம்மேளன நிர்வாகி வெங்கடேஷ் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகி நவநீதகிருஷ்ணன், நேஷனல் வங்கி ஊழியர் சம்மேளன நிர்வாகி ராஜேந்திரன், அனைத்து இந்திய வங்கி ஊழியர் சங்க நாராயணசாமி பேசினர்.