sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் ஸ்டேஷனில் சிறுவன் புகார்: தாய், கள்ளக்காதலன் மீது வழக்கு

/

போலீஸ் ஸ்டேஷனில் சிறுவன் புகார்: தாய், கள்ளக்காதலன் மீது வழக்கு

போலீஸ் ஸ்டேஷனில் சிறுவன் புகார்: தாய், கள்ளக்காதலன் மீது வழக்கு

போலீஸ் ஸ்டேஷனில் சிறுவன் புகார்: தாய், கள்ளக்காதலன் மீது வழக்கு


ADDED : ஜூலை 02, 2024 05:37 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: தன்னை அடித்து துன்புறுத்துவதாக போலீஸ் ஸ்டேஷனுக்கு தனியாக வந்து சிறுவன் அளித்த புகாரின்பேரில் தாய் முத்து லெட்சுமி 35, கள்ளக்காதலன் செல்வக்குமார் 40, மீதுபோலீசார் வழக்கு பதிந்தனர்.

விருதுநகர் ஏ.டி.பி., காம்பவுண்டைச் சேர்ந்தவர் முத்துலெட்சுமி. கணவரை பிரிந்து 10 வயது சிறுவனுடன் வசித்து வருகிறார். இவருக்கும் கள்ளிக்குடியைச் சேர்ந்த மனைவியை பிரிந்த செல்வக்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் ஒன்றாக வசிக்கின்றனர்.

சிறுவன் சரியாக படிப்பதில்லை என செல்வகுமார் தொடர்ந்து தாக்கி வந்துள்ளார்.

இவருடன் தாயும் சேர்ந்து சிறுவனை தாக்கியுள்ளார். ஜூன் 30 இரவு இருவரும் தாக்கியதில் சிறுவன் காயமடைந்துள்ளார்.

நேற்று காலை விருதுநகர் மேற்கு போலீஸ் ஸ்டேஷனிற்கு தனியாக வந்த சிறுவன் நடந்ததை போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

அவரை விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அருள்செல்விக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது பரிந்துரையில் சமூக பணியாளர் கார்த்திகை ராஜன் சிறுவனிடம் விசாரணை செய்தார். மேற்கு போலீசார் சிறுவனின் தாய், கள்ளக்காதலன் வழக்கு பதிந்தனர்.






      Dinamalar
      Follow us