ADDED : ஆக 26, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்,:
கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: குரூப் 2, 2ஏ தேர்வு செப். 14ல் நடக்க உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் ஆக. 28, செப். 2, 6 ஆகிய நாட்களில் நடக்கிறது.
பங்கேற்க விரும்புவோர் நேரடியாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது ஆன்லைன் வாயிலாக https://forms.gle/JH6NeHJh8ETkv4qGA என்ற கூகுள் பார்மை பூர்த்தி செய்து, தேர்வு நடக்கும் நாட்களில் காலை 10:00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு , தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து மாதிரி தேர்வை எழுதலாம், என்றார்.

