sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வீட்டில் 1.26 லட்சம் திருட்டு கேபிள் டிவி உரிமையாளர் மீது வழக்கு

/

வீட்டில் 1.26 லட்சம் திருட்டு கேபிள் டிவி உரிமையாளர் மீது வழக்கு

வீட்டில் 1.26 லட்சம் திருட்டு கேபிள் டிவி உரிமையாளர் மீது வழக்கு

வீட்டில் 1.26 லட்சம் திருட்டு கேபிள் டிவி உரிமையாளர் மீது வழக்கு


ADDED : மார் 05, 2025 06:11 AM

Google News

ADDED : மார் 05, 2025 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீட்டில் 1.26 லட்சம் திருட்டு

விருதுநகர்: விருதுநகர் அருகே பாவாலி நடுத்தெருவைச் சேர்ந்தவர் லெக்கன் 40. இவரின் வீட்டு வாசலில் நின்ற டூவீலரில் இருந்து சாவிகள் காணாமல் போனது. அதன் பின் பிப். 15ல் காலை 11:00 மணிக்கு சமையலறை கப்போர்டில் இருந்த ரூ. 38 ஆயிரம் திருடுபோனது. இதனால் வீட்டின் சி.சி.டி.வி., பதிவுகளை ஆராய்ந்ததில் தங்கள் பகுதியில் கேபிள் டிவி நடத்தி வரும் அல்லம்பட்டியைச் சேர்ந்த ஸ்ரீராம் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இவர் இதற்கு முன்பு ரூ. 88 ஆயிரம் திருடியதும், இதே போன்று பல முறை திருட்டில் ஈடுபட்டுள்ளதும் தெரிந்தது. ஆமத்துார் போலீசார் ஸ்ரீராம் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

டூவீலரில் நாய் குறுக்கிட்டதால் கீழே விழுந்து பலி

தளவாய்புரம்: தளவாய்புரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டியன் 48, மேளக் கலைஞர். பிப்.24 ல் தென்காசி மெயின் ரோடு கோரையாறு பஸ் ஸ்டாப் அருகே டூ வீலரில் கடந்த போது குறுக்கே நாய் புகுந்தது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்தவர் நெற்றி முன் தலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். தளவாய்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மூதாட்டி பலி

விருதுநகர்: புல்லலக்கோட்டை ரோடு உழவர் சந்தை அருகே 70 வயதுடைய மூதாட்டி மார்ச் 3 இரவு 7:30 மணிக்கு நடந்து சென்றார். இவர் மயங்கி விழுந்ததால் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது டாக்டர்கள் ஏற்கனவே பலியானதாக தெரிவித்தனர். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us