sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

வனத்திற்குள் சாத்துார்: லட்சியத்துடன் செயல்படும் இளைஞர்கள்

/

வனத்திற்குள் சாத்துார்: லட்சியத்துடன் செயல்படும் இளைஞர்கள்

வனத்திற்குள் சாத்துார்: லட்சியத்துடன் செயல்படும் இளைஞர்கள்

வனத்திற்குள் சாத்துார்: லட்சியத்துடன் செயல்படும் இளைஞர்கள்


ADDED : ஏப் 01, 2024 06:34 AM

Google News

ADDED : ஏப் 01, 2024 06:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார் இளைஞர்கள் ஒருங்கிணைந்து வனத்திற்குள் சாத்துார் என்ற லட்சியத்துடன் மரம் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாத்துார் அண்ணா நகர், பெரியார் நகர் இளைஞர்கள் இணைந்து சாலை ஓரங்களில் குரோட்டன்ஸ் செடிகள் அரளிச் செடிகள் மற்றும் மரங்களை வரிசையாக வளர்த்து நகருக்கு அழகு சேர்த்து வருகின்றனர். கந்தக பூமியான சாத்துாரில் சாலை விரிவாக்க பணி பாதாள சாக்கடை விரிவாக்க திட்டம் குடிநீர் திட்ட பணிகள் என பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக சாலை ஓரத்தில் இருந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.

இதன் காரணமாக நகர் பகுதி முழுவதும் மரங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. தன்னார்வ மிக்க இளைஞர்கள் தாங்களாக முன்வந்து நிதி திரட்டி இழந்த இயற்கை அழகை மீட்க மரக்கன்றுகள் நடத்தொடங்கினர்.

பெரியார் நகர் அண்ணா நகர் இடையிலான சாலையில் குரோட்டன்ஸ் செடிகள் அரளிப்பூ செடிகள் வேம்பு புங்கை புளிய மரங்கள் என வளர்த்து சோலையாக மாற்றி வருகின்றனர். கடும் கோடை காலத்திலும் மரத்தின் நிழலில் இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வெப்பத்தை உணராத வகையில் சாலையில் நடந்து செல்கின்றனர்.

அண்ணா நகரில் மட்டுமின்றி பைபாஸ் ரோடு வைப்பாற்றுக் கரைகளிலும் இளைஞர்கள் மரங்களை வளர்த்து உள்ளனர். வைப்பாற்றுக் கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட பனைமர விதைகளை நடவு செய்துள்ளனர். வனத்திற்குள் சாத்துார் என்பது போல இயற்கை சூழலை சாத்துார் நகர் முழுவதும் ஏற்படுத்த உழைத்து காட்டி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us