பேராசிரியர்களுக்கு
இணையவழி பயிற்சி
சாத்துார்: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் இணைய வழி 5 நாள் பேராசிரியர் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
கட்டுமான தொழில்நுட்பத்தில் 3டி பிரிண்டிங் என்ற தலைப்பில் செப். 2 முதல் 6 வரை நடந்தது.எல்அன் டி கட்டுமான ஆராய்ச்சி மையத்தின் உதவி மேலாளர்
தயாலினி பாலசுப்பிரமணியன் ,திருப்பதி இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் உதவி பேராசிரியர் , ராகுல் ,சென்னை ட்வஸ்தாவணிகபொருள்
நிறுவன தலைவர் சாந்தனு பட்டாச்சார்ஜி ,சென்னை சி. எஸ். ஐ .ஆர் .எஸ் . இ. ஆர். சி. முதன்மை விஞ்ஞானி பிரதாப் ரஞ்சன் பிரேம் ,வேலுார் தொழில்நுட்ப பல்கலை, பேராசிரியர் ஜெயபிரகாஷ் பேசினார்.
நாடு முழுவதும் இருந்து 50க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் இணைய வழியில் கலந்துகொண்டு பயன் பெற்றனர். ஒருங்கிணைப்பாளர்கள் செல்லா கிப்டா ,ஹர்ஷினி ,துறைபேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.