ADDED : ஜூன் 13, 2024 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா மல்லி ஊராட்சி ராமகிருஷ்ணாபுரத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 39 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சமுதாயக்கூடத்தை கலெக்டர் ஜெயசீலன் நேற்று திறந்து வைத்தார்.
விழாவில் திட்ட இயக்குனர் தண்டபாணி, ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகம், வருவாய்த்துறை, ஊராட்சி துறை உட்பட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்.