ADDED : ஆக 03, 2024 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்,: விருதுநகர் காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு ஒரு மாத காலத்திற்கான திறன் வளர் பயிற்சி முகாமின் நிறைவு விழா நடந்தது.
முகாமில் தற்போது இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் மாணவர்கள் தங்களது தனித்திறன்களை வளர்த்து, வேலைவாய்ப்பை பெற்றுக் கொள்வதற்காக புரோகிராமிங் பயிற்சியும், ஆப்டிடியூட் பயிற்சியும் வழங்கப்பட்டன. கல்லுாரி செயலாளர் தர்மராஜன் பயிற்சி பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினார். முதல்வர் செந்தில் வரவேற்றார். கல்லுாரியின் வேலைவாய்ப்பு அலுவலர் சுடலைமணி நன்றிக்கூறினார்.