sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

போலீஸ் ஸ்டேஷனில் வீணாகி வரும் பறிமுதல் மாட்டு வண்டிகள், வாகனங்கள்

/

போலீஸ் ஸ்டேஷனில் வீணாகி வரும் பறிமுதல் மாட்டு வண்டிகள், வாகனங்கள்

போலீஸ் ஸ்டேஷனில் வீணாகி வரும் பறிமுதல் மாட்டு வண்டிகள், வாகனங்கள்

போலீஸ் ஸ்டேஷனில் வீணாகி வரும் பறிமுதல் மாட்டு வண்டிகள், வாகனங்கள்


ADDED : ஜூலை 02, 2024 06:33 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நரிக்குடி : நரிக்குடியில் மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டிகள், வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு, நீண்ட நாட்களாக போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் கிடப்பதால் வீணாகி வருகிறது.

நரிக்குடி பகுதிகளில் கிருதுமால் நதி, ஓடைகள் உள்ளிட்டவைகளில் கிடக்கும் மணலை மாட்டு வண்டிகள், லாரி, டிராக்டர், வேன் உள்ளிட்ட வாகனங்களில் திருடுகின்றனர். அவர்களை பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர்.

மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு தொடரப்படுகிறது. வழக்கு முடியும் வரை பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தப்படுகிறது.

வெயில், மழைக்கு துருப்பிடித்து சேதமடைகிறது. உரிய தண்டனை பெற்று, அபராதம் செலுத்தி வாகனத்தை மீட்கும் போது பெரும்பாலான உதிரி பாகங்கள் பயன்பாடு இன்றி போகிறது. வாகனங்களை சீரமைக்க பல ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இது ஒரு புறம் இருக்க பெரும்பாலானவர்கள் வாகனங்களை மீட்காமல் அப்படியே விட்டு விடுகின்றனர்.

துருப்பிடித்து பயன்பாடின்றி போகிறது. திறந்தவெளியில் கிடப்பதால் உதிரி பாகங்கள் காணாமல் போகிறது. வீணாவதை தடுக்க உரிய காலத்திற்குள் ஏலம் விட்டு அரசுக்கு வருவாயை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us