sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சதுரகிரியில் கூட்ட நெரிசல் தண்ணீரின்றி பலர் மயக்கம்

/

சதுரகிரியில் கூட்ட நெரிசல் தண்ணீரின்றி பலர் மயக்கம்

சதுரகிரியில் கூட்ட நெரிசல் தண்ணீரின்றி பலர் மயக்கம்

சதுரகிரியில் கூட்ட நெரிசல் தண்ணீரின்றி பலர் மயக்கம்


ADDED : ஆக 05, 2024 07:24 PM

Google News

ADDED : ஆக 05, 2024 07:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்:மதுரை மாவட்டம், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை 3:30 மணி முதல், பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் மலையேறிய நிலையில் மதியம் 12:00 மணிக்கு மேல் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட, அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் வழியில் காராம்பசு வழித்தடம் என்ற இடத்தில் பாறை ஒன்று குறுக்கே கிடந்ததால், அந்த இடத்தில் ஒவ்வொருவராகத் தான் செல்ல முடிந்தது. இதனால் அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்வதற்கு எட்டு மணி நேரமானது. மலை ஏறுபவர்களும் இறங்குபவர்களும் அதிகரித்ததால், நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் தாமதமானது.

இரவு 7:00 மணிக்கு மேல் 12:00 மணி வரை குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதில் பலர் மயக்கம் அடையும் நிலைக்கு சென்றனர். தகவலறிந்த மலை அடிவாரத்தில் இருந்த விருதுநகர் மாவட்ட போலீசார், ஆயிரக்கணக்கான குடிநீர் பாட்டில்களுடன் சம்பவ பகுதிக்கு சென்று அங்கிருந்தவர்களுக்கு வழங்கினர்.

கூட்ட நெரிசலில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 17 வயது இரட்டையர் சிறுமியர் மற்றும் லட்சுமி, 52 என்பவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அடிவாரத்திற்கு அழைத்து வந்து முதலுதவி சிகிச்சை அளித்து, பின் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மலையில் தங்கியிருந்தவர்கள் நேற்று காலை முதல், அடிவாரம் திரும்பியதால், நேற்று காலை 11:30 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை. பின், 500 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us