/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 10 முதல் கலந்தாய்வு
/
அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 10 முதல் கலந்தாய்வு
ADDED : ஜூன் 06, 2024 05:35 AM
நரிக்குடி : திருச்சுழி அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் எஸ்தர் விடுத்துள்ள அறிக்கை:
திருச்சுழி அரசு கலை அறிவியல் கல்லூரியில் 2024 --25ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 10 முதல் நடக்கிறது. இளநிலை பாடப்பிரிவில் தமிழ் ஜூன் 10, ஆங்கிலம் 11ல், வணிகவியல் 12ல், வேதியியல் 13ல், கணினி, அறிவியல் 14ல், காலை 10:00 மணி முதல் மாலை 3 :00 மணி வரை நடைபெறும்.
கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்த விண்ணப்ப நகல், மாற்றுச் சான்றிதழ், 10, 11, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட இதர சான்றிதழ்கள் அசலும், ஒவ்வொரு சான்றிதழ்க்கும் 4 நகல்கள் கொண்டு வர வேண்டும்.
அத்துடன் 4 பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்கள், வங்கி பாஸ்புக் அசல் மற்றும் நகல் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.