/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வனமூர்த்திலிங்கபுரம் மேம்பால ரோடு சேதம்; விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
வனமூர்த்திலிங்கபுரம் மேம்பால ரோடு சேதம்; விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
வனமூர்த்திலிங்கபுரம் மேம்பால ரோடு சேதம்; விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
வனமூர்த்திலிங்கபுரம் மேம்பால ரோடு சேதம்; விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஆக 09, 2024 12:16 AM

சிவகாசி: வெம்பக்கோட்டையிலிருந்து சிவகாசி செல்லும் ரோட்டில் வனமூர்த்திலிங்கபுரம் பஸ் ஸ்டாப் அருகே உள்ள மேம்பாலத்தில் ரோடு சேதம் அடைந்திருப்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.
வெம்பக்கோட்டையிலிருந்து சிவகாசி செல்லும் ரோட்டில் வனமூர்த்தி லிங்கபுரம் பஸ் ஸ்டாப் அருகே 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓடையின் மீது மேம்பாலம் கட்டப்பட்டது. இதன் வழியாக, சிவகாசி, சாத்தூர், கழுகுமலை, சங்கரன்கோவில், ராஜபாளையம் உள்ளிட்ட நகரங்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. மேலும் இதே பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளுக்கான வாகனங்களும் அதிக அளவில் சென்று வருகின்றன.
இதனால் இப்பகுதியில் போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் மேம்பாலத்தின் மீது அமைக்கப்பட்ட ரோடு சேதம் அடைந்துள்ளது. தொடர்ச்சியாக பள்ளம் இருப்பதால் இதில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகின்றது. இங்கு தெருவிளக்குகளும் இல்லாததால் டூவீலரில் வருபவர்கள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர்.
அவ்வப்போது பாலத்தில் சேதமடைந்த ரோட்டில் ஒட்டுப் போடும் பணி மட்டுமே நடக்கின்றது. ஆனால் முழுமையாக சீரமைக்க வில்லை. எனவே உடனடியாக இங்கு சேதமடைந்த ரோட்டினை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.