sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

மூன்றே ஆண்டுகளில் சேதம்; நாரணாபுரம் ரோடால் அவதி

/

மூன்றே ஆண்டுகளில் சேதம்; நாரணாபுரம் ரோடால் அவதி

மூன்றே ஆண்டுகளில் சேதம்; நாரணாபுரம் ரோடால் அவதி

மூன்றே ஆண்டுகளில் சேதம்; நாரணாபுரம் ரோடால் அவதி


ADDED : மே 31, 2024 06:49 AM

Google News

ADDED : மே 31, 2024 06:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி அருகே பள்ளப்பட்டி ஊராட்சி உசேன் காலனியில் இருந்து நாரணாபுரம் செல்லும் ரோடு சேதம் அடைந்திருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

சிவகாசி அருகே பள்ளப்பட்டி ஊராட்சி உசேன் காலனியில் இருந்து 56 வீட்டு காலனி வழியாக நாரணாபுரம் 3 கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது. இப்பகுதியில் அச்சகம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகள் அதிகமாக உள்ளன. இந்த ரோடு சேதம் அடைந்திருந்த நிலையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக அமைக்கப்பட்டது.

இந்நிலையில் புதிதாகப் போடப்பட்ட மூன்று ஆண்டுகளிலேயே இந்த ரோடு ஆங்காங்கே சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. இதில் கனரக வாகனங்கள், டூவீலர்கள் சென்று வருவதில் பெரிது சிரமம் ஏற்படுகின்றது.

மேலும் மழைக்காலங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகின்றது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுகின்றது. எனவே இப்பகுதியில் சேதம் அடைந்த ரோட்டினை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us