/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கீழ தாயில்பட்டியில் சேதமடைந்த குடிநீர் தொட்டி; பள்ளி மாணவர்கள், மக்கள் அச்சம்
/
கீழ தாயில்பட்டியில் சேதமடைந்த குடிநீர் தொட்டி; பள்ளி மாணவர்கள், மக்கள் அச்சம்
கீழ தாயில்பட்டியில் சேதமடைந்த குடிநீர் தொட்டி; பள்ளி மாணவர்கள், மக்கள் அச்சம்
கீழ தாயில்பட்டியில் சேதமடைந்த குடிநீர் தொட்டி; பள்ளி மாணவர்கள், மக்கள் அச்சம்
ADDED : செப் 01, 2024 11:54 PM

சிவகாசி : வெம்பக்கோட்டை ஒன்றியம் கீழ தாயில்பட்டியில் சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியால் புதிய வகுப்பறை கட்டடமும் திறக்கப்படாததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே சேதம் அடைந்த தொட்டியை அகற்றி பள்ளி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் கீழே தாயில்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது. தொட்டியில் இருந்து கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்ட நிலையில் தொட்டி சேதம் அடைந்ததால் தண்ணீர் ஏற்றுவது நிறுத்தப்பட்டது.
அதற்குப் பதிலாக அருகிலேயே புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பழைய தொட்டி முழுவதுமே சேதம் அடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
பள்ளி மாணவர்கள் விபரீதம் அறியாமல் தொட்டி அருகே விளையாடுகின்றனர். தொட்டி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு என புதிய வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது.
தொட்டி சேதம் அடைந்து இருப்பதால் இதுவரையிலும் புதிய கட்டடம் திறக்கப்படவில்லை. மேலும் சேதமடைந்த தொட்டி அருகே சமையல் கூடமும் செயல்படுகிறது. எனவே சேதம் அடைந்த தொட்டியை உடனடியாக இடித்து அகற்றி புதிய வகுப்பறை கட்டடம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.