
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: குறைந்த பட்ச கூலி சட்டத்தின் படி ஓ.எச்.டி., ஆபரேட்டர்கள், துாய்மை பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க கோரி விருதுநகரில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் திருமலை தலைமை வகித்தார். சி.ஐ.டி.யு., மாவட்டத் தலைவர் மகாலட்சுமி, செயலாளர் தேவா, மாநில பொதுச் செயலாளர் பாலசுப்பிரமணியன் பேசினர். மாநிலக்குழு உறுப்பினர் அசோகன், துணைச் செயலாளர் சாராள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

