ADDED : ஜூன் 23, 2026 04:51 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார், ஜூன் 24-
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே நத்தம்பட்டியில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட டோல்கேட்டை அகற்ற கோரியும், பணிகள் நிறைவடையாமல் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த கோரியும், விருதுநகர் மாவட்ட அனைத்து வாகன சங்கங்கள் சார்பில் நேற்று காலை 11:00 மணிக்கு நடந்தது.
ஒருங்கிணைப்பு குழு கன்வீனர் கண்ணன் தலைமையில் ஏராளமான
டிரைவர்கள், வாகன உரிமையாளர்கள் பங்கேற்றனர். நத்தம்பட்டி, கிருஷ்ணன் கோவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
