ADDED : ஜூலை 16, 2026 08:11 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் 2003க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துதல், அகவிலைப்படி நிலுவைகளை வழங்குதல் உள்பட 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பொதுச்செயலாளர் போஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் சி.ஐ.டி.யு., மாநில குழு உறுப்பினர் கார்மேகம், மண்டல பொதுச்செயலாளர் வெள்ளைத்துரை உள்பட பலர் பங்கேற்றனர்.
