UPDATED : ஜூலை 16, 2026 09:27 PM
ADDED : ஜூலை 16, 2026 08:52 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் ஸ்ரீவி லயன்ஸ் பள்ளிகள் குழுமம் போட்டித்தேர்வுகளுக்கு தயார் செய்யும் வேதாந் குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கல்வியாண்டில் 8, 9, 10ம் வகுப்புகளில் பயிலும் திறமையுள்ள மாணவர்களுக்கு பவுண்டேஷன் கோர்ஸ் வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.
மேலும் அடுத்தாண்டு பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு நீட், சி.யு.இ.டி., ஜே.இ.இ., தேர்வுகளுக்கு தயாராகும் வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. வேதாந் குழுமத்தின் கட்டணத்தில் பெரும் பங்கை பள்ளி நிர்வாகமே ஏற்கும். ஸ்ரீவில்லிப்புத்துார் பகுதியை சேர்ந்த மாணவர்கள் பயன்பெற்று வெற்றி பெற வேண்டும் என பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி, நிர்வாக குழுவினர்கள் தெரிவித்துள்ளனர்.
