ADDED : ஜூலை 24, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: நகராட்சி மாநகராட்சி ஊழியர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம், ஓய்வூதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் நிர்வாகி சந்தான மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கிளைச் செயலாளர் நடராஜன், மக்கள் நலப் பணியாளர் சங்க பொதுச்செயலாளர் முத்துப்பாண்டி, அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் கருப்பசாமி உள்பட நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்
