நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி சிவகாமிபுரம் காலனியைச் சேர்ந்தவர் முனியசாமி 37.
திருப்பூரில் வேலை செய்து வந்த இவர் இரு வாரங்களுக்கு முன்பு சிவகாசி வந்து பட்டாசு ஆலையில் அறையை குத்தகைக்கு எடுத்து தொழில் செய்ய முயற்சி செய்து வந்தார். இதற்காக தனது டூவீலரில் விளாம்பட்டி ரோடு ஒத்த புலி விலக்கு அருகே சென்றபோது ஊராம் பட்டி வடக்கு தெருவை சேர்ந்த இன்பராஜ் 26 ,ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் முனியசாமி இறந்தார். மாரனேரி போலீசார் விசாரிக்கின்றனர்.