/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விஜய கரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் விளக்கு கண்டெடுப்பு
/
விஜய கரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் விளக்கு கண்டெடுப்பு
விஜய கரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் விளக்கு கண்டெடுப்பு
விஜய கரிசல்குளம் அகழாய்வில் சுடுமண் விளக்கு கண்டெடுப்பு
ADDED : ஆக 19, 2024 07:04 AM

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், விஜயகரிசல்குளத்தில் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரை, உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்ட காய்கள், உள்ளிட்ட 1,300க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அதிக அளவிலான உடைந்த நிலையில் பழங்கால செங்கற்கள், பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சுடு மண்ணால் ஆன அலங்கரிக்கப்பட்ட விளக்கு, முத்திரை, கல்பந்து, கல்வட்ட சில்லு ஆகியவை சமீபத்தில் கண்டெடுக்கப்பட்டன.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், ''இங்கு முன்னோர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டதற்கான பல்வேறு சான்று கிடைத்து வருகிறது. அதன்படி, வணிகத்திற்கு முத்திரையை பயன்படுத்தி உள்ளனர். வெளிச்சத்திற்காக விளக்கு பயன்பட்டுள்ளது. கல்பந்து வேட்டையாடுவதற்கு அல்லது எடைபொருளாக பயன்பட்டிருக்கலாம்,” என்றார்.

