ADDED : ஜூலை 31, 2024 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட பேரவைக் கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் உலகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் ராஜபாண்டி, சிவக்குமார், மாரிமுத்து, ஜீவானந்தம் முன்னிலை வகித்தனர். செயலாளர் செல்வின் வேலை அறிக்கை வாசித்தார். பொருளாளர் பிச்சை நிதிநிலை அறிக்கை வாசித்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் புவனேசன், பொதுச்செயலாளர் எட்டியப்பன், அரசு ஊழியர் சங்க முன்னாள் பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன், மாநில துணை தலைவர் கண்ணன் பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமர் நன்றிகூறினார்.

