நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் முருகேசன், தமிழக மருத்துவத்துறையில் 34 ஆண்டுகள் பணியாற்றி பணி ஓய்வு பெற்றார். இவருக்கான பிரிவுபசார விழா டீன் சீதாலட்சுமி தலைமையில் நடந்தது.
மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் பாபுஜி, கல்லுாரி துணை முதல்வர் அனிதா, உதவி நிலைய மருத்துவ அலுவலர் முரளிதரன், மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.