/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செவல்பட்டி அங்கன்வாடி மையம் முன் கழிவுநீர்
/
செவல்பட்டி அங்கன்வாடி மையம் முன் கழிவுநீர்
ADDED : மே 08, 2024 06:22 AM

சிவகாசி ; வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியில் அங்கன்வாடி மையம், துணை சுகாதார மையம் முன்பு தேங்கியுள்ள கழிவு நீரால் குழந்தைகள், மக்கள் தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியில் நான்கு விலக்கு ரோட்டின் அருகே அங்கன்வாடி மையம், துணை சுகாதார மையம் அரசு , ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகின்றது. இந்நிலையில் துணை சுகாதார மையம், அங்கன்வாடி மையம் கட்டடங்களுக்கு நடுவே கழிவுநீர் தேங்கியுள்ளது.
இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்படுகின்றது.
இதில் கொசு உற்பத்தியாகி அருகில் உள்ள அங்கன்வாடி மையம் குழந்தைகளை கடிப்பதால் தொற்று நோய்க்கு ஆளாகின்றனர். மேலும் துணை சுகாதார மையத்திற்கு வருகின்ற மக்களும் இதனால் அவதிப்படுகின்றனர். மழைக்காலங்களில் துணை சுகாதார மையம், அங்கன்வாடி மையம் வளாகம் முழுவதுமே தண்ணீர் தேங்கி விடுகின்றது, இதனால் குழந்தைகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

