sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தெரு நடைபாதையில் குடிநீர் பகிர்மான குழாய்

/

தெரு நடைபாதையில் குடிநீர் பகிர்மான குழாய்

தெரு நடைபாதையில் குடிநீர் பகிர்மான குழாய்

தெரு நடைபாதையில் குடிநீர் பகிர்மான குழாய்


ADDED : மே 29, 2024 05:07 AM

Google News

ADDED : மே 29, 2024 05:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கிராமத்தில் குடிநீர் பகிர்மான குழாயை தெருவில் நடைபாதையில் பதித்துள்ளதால் நடந்து செல்பவர்கள் தடுக்கி விழுகின்றனர்.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது கட்டங்குடி ஊராட்சி. இதில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக தெருக்களில் பகிர்மான குழாய் பதிக்கும் பணி 3 மாதங்களுக்கு முன்பு நடந்தது.

வடக்கு தெரு உட்பட தெருக்களில் பகிர்மான குழாயை நடைபாதையின் ஓரங்களில் பதிக்காமல், தெருவிலேயே தரமற்று முறையில் கடமைக்கு பதித்துள்ளனர். இதனால் குறுகிய தெருவாக

இருப்பதால், இரவு நேரங்களில் முதியோர் நடக்கும் போது, குழாயில் தடுக்கி விழுகின்றனர். டூ வீலர்களில் செல்லும் போது வழுக்கி விடுவதாக வாகன ஓட்டிகள் புலம்புகின்றனர்.

குழாய்கள் பொருத்தப்பட்ட இணைப்புகளில் தண்ணீர் 'லீக்' ஆகி வருகிறது, கனரக வாகனங்கள் தெருவில் வந்தால் குழாய்கள் நசுங்கிவிடும் நிலையில் உள்ளது.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல ஊராட்சிகளில் ஜல்ஜீவன் திட்டத்தில் குழாய்கள் பதிக்கும் பணி தரமற்ற முறையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுத்து தரமாக நீண்ட காலம் உழைக்கும் வகையில் குழாய்களை பதிக்க அறிவுறுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us