ADDED : ஜூன் 20, 2024 04:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: சாத்துாரில் காற்றில் சாய்ந்த மின்கம்பத்தை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாத்துார் நடுவப்பட்டி அருகே வேப்பிலைப்பட்டியில் உள்ள ஒரு விளைநிலத்தில் மழை, பலத்த காற்றால் ஒரு மாதம் முன்பு மின்கம்பம் ஒன்று ஒடிந்து விழுந்து விட்டது. மின் வினியோகம் துண்டிக்கப்பட்டாலும் தற்போது வரை சரி செய்யவில்லை.
மின் ஊழியர்களிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. பயிர்களும் சாய்ந்து விட்டன. இதை சரி செய்து புதிய மின்கம்பம் நட வேண்டும். இல்லையென்றால் விளைநிலத்தில் சாகுபடி பாதிக்கும் அபாயம் உள்ளது.