ADDED : ஜூன் 16, 2026 07:14 PM
விருதுநகர்: விருதுநகரில் டி.என்.இ.பி., எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாளராக பதவி மாற்றம் செய்ய வலியுறுத்தி திட்டத் தலைவர் இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
முத்தரப்பு ஒப்பந்தத்தின் படி 9613 கேங்மேன்களை கள உதவியாளராக மாற்றம் செய்ய வலியுறுத்தி, கேங்மேன் எம்ப்ளாயீஸ் யூனியன் சார்பாக சென்னையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரண்டு நாட்களாக நடத்தி வரும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக டி.என்.இ.பி., எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட கூடுதல் செயலாளர் மாரியப்பன், மாநில உப தலைவர் ஞானகுரு கார்த்திக்ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராடும் தொழிலாளர்களை கைது செய்த நடவடிக்கையை கண்டித்து மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் மணிகண்டன் பேசினார்.
