/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விஜயகரிசல் குளத்தில் கூடுதலாக 2 குழிகளில் அகழாய்வு
/
விஜயகரிசல் குளத்தில் கூடுதலாக 2 குழிகளில் அகழாய்வு
விஜயகரிசல் குளத்தில் கூடுதலாக 2 குழிகளில் அகழாய்வு
விஜயகரிசல் குளத்தில் கூடுதலாக 2 குழிகளில் அகழாய்வு
ADDED : மார் 10, 2025 07:05 AM

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல் குளம் மூன்றாம் கட்ட அகழாய்வில் 22 குழிகளில் பணிகள் முடிந்த நிலையில் மேலும் புதிதாக இரண்டு குழிகளில் அகழாய்வு துவங்கியது.
இங்கு நடக்கும் மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையிலும் தோண்டப்பட்ட 22 குழிகளில் உடைந்த நிலையில் சூடு மண் உருவ பொம்மை, வட்ட சில்லு, தங்க மணி, சூது பவள மணி உள்ளிட்ட 4000 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது வரை 22 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் முடிந்து குழிகளை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்துள்ளது.
கூடுதலாக இரு குழிகள்
இந்நிலையில் மேலும் புதிதாக இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு செய்யும் பணிகள் துவங்கியது. முதல் கட்ட அகழாய்வில் 16 குழிகளில் 3254, இரண்டாம் கட்ட அகழாய்வில் 18 குழிகளில் 4500 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தது. மூன்றாம் கட்ட அகழாய்வில் இதுவரையில் 22 குழிகளில் 4000 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு 6 முதல் 8 குழிகள் வரை தோண்டப்பட உள்ளது. இதனால் முதல் இரு அகழாய்வை விட கூடுதல் பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில் '' மூன்றாம் கட்ட அகழாய்வில் கூடுதல் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற உள்ளது. இரு அகழாய்வை விட இந்த அகழாய்வில் சூது பவள மணி, முழுமையான சுடு மண் காதணி உள்பட பல்வேறு வித்யாசமான பொருட்கள் கிடைத்துள்ளது. இனிமேலும் புதிய பொருட்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது'' என்றார்.