sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கால்நடைகள் சாலையில் திரிந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம்

/

கால்நடைகள் சாலையில் திரிந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம்

கால்நடைகள் சாலையில் திரிந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம்

கால்நடைகள் சாலையில் திரிந்தால் உரிமையாளர்களுக்கு அபராதம்


ADDED : ஜூன் 27, 2024 11:53 PM

Google News

ADDED : ஜூன் 27, 2024 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார் : சாத்துார் நகராட்சிக் குட்பட்ட பகுதியில் சாலைகளில் கால்நடைகளை திரியவிட்டால் உரிமையாளர்களுக்கு அபராதம்விதிக்கப்படும் என நகராட்சி கமிஷனர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார்.

கமிஷனர் ஜெகதீஸ்வரி கூறியதாவது:

சாத்துார் நகராட்சி பகுதிகளில் கால்நடைகளை வளர்ப்பவர்கள் நகரின் பிரதான சாலைகளில் மேய விடாமல் உரிய இடத்தில் கட்டி வைக்க வேண்டும்.

மேலும் சாலைகள், பொது இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளால் மக்கள் , போக்குவரத்திற்கு இடையூறாகவும் அச்சுறுத்தலாகவும் விபத்துக்கள் ஏற்பட காரணமாகிறது.

எனவே கால்நடைகள் சாலையில் திரியும் பட்சத்தில் பொது சுகாதாரசட்டம் 1939ன் படி நகராட்சி மூலம் கால்நடைகள் பிடிக்கப்பட்டு முதல் முறை ரூ5000, இரண்டாவது முறை ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுவதோடு மாடுகளை பராமரிக்கும் கட்டணம் நாள் ஒன்றுக்கு ரூ 500 தனியாக வசூல் செய்யப்படும்.

மூன்றாவது முறை கால்நடைகள் பிடிக்கப்பட்டால் நகராட்சி மூலம் ஏலம் விடப்படும் என இதன் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது. எனவே தங்களது கால்நடைகளை முறையாக தொழுவம் அமைத்து பராமரிக்க வேண்டும், என்றார்.






      Dinamalar
      Follow us