sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பட்டாசு ஆலை வெடி விபத்து சிவகாசி அருகே இருவர் பலி பெண் உட்பட இருவர் படுகாயம்

/

பட்டாசு ஆலை வெடி விபத்து சிவகாசி அருகே இருவர் பலி பெண் உட்பட இருவர் படுகாயம்

பட்டாசு ஆலை வெடி விபத்து சிவகாசி அருகே இருவர் பலி பெண் உட்பட இருவர் படுகாயம்

பட்டாசு ஆலை வெடி விபத்து சிவகாசி அருகே இருவர் பலி பெண் உட்பட இருவர் படுகாயம்


ADDED : ஜூலை 09, 2024 10:36 PM

Google News

ADDED : ஜூலை 09, 2024 10:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி:சிவகாசி சோலை காலனியைச் சேர்ந்தவர் முருகவேல், 58. இவருக்கு, எம்.புதுப்பட்டி அருகே காளையார்குறிச்சியில், நாக்பூர் உரிமம் பெற்ற, 'சுப்ரீம்' என்ற பெயரிலான பட்டாசு ஆலை உள்ளது. அதில், 108 அறைகள் உள்ளன. நேற்று காலை, 117 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். காலை 9:30 மணிக்கு பட்டாசு கலவை அறையிலிருந்து மருந்துகளை தள்ளுவண்டியில் எடுத்து, உற்பத்தி அறைக்கு தொழிலாளர்கள் இருவர் தள்ளிச் சென்றனர்.

அங்கு மருந்தை எடுத்து வைக்கும் போது, தவறி கீழே விழுந்ததில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அறையில் இருந்த சிதம்பராபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் 47, முத்து முருகன், 45, சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், சரோஜா, 55, சங்கரவேல், 54, ஆகியோர் தீக்காயத்துடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிவகாசி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

ஆலையின் போர்மேன் ஓ.கோவில்பட்டியை சேர்ந்த குணசேகரன், மேலாளர் சிவகாசி பன்னீரை, எம்.புதுப்பட்டி போலீசார் கைது செய்தனர். ஆலையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

மருந்து கீழே விழுந்து வெடி சத்தம் கேட்டவுடன், மற்ற அறைகளில் பணிபுரிந்த தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறினர். இதனால், உயிர் சேதம் அதிகமாவது தவிர்க்கப்பட்டது.






      Dinamalar
      Follow us