sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இயல்பு நிலைக்கு திரும்பிய பட்டாசு, தீப்பெட்டி தொழில்கள்

/

இயல்பு நிலைக்கு திரும்பிய பட்டாசு, தீப்பெட்டி தொழில்கள்

இயல்பு நிலைக்கு திரும்பிய பட்டாசு, தீப்பெட்டி தொழில்கள்

இயல்பு நிலைக்கு திரும்பிய பட்டாசு, தீப்பெட்டி தொழில்கள்


ADDED : ஏப் 21, 2024 03:39 AM

Google News

ADDED : ஏப் 21, 2024 03:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: லோக்சபா தேர்தலால் விருதுநகர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சிவகாசி, சாத்துார் சட்டசபை தொகுதியில் பிரசாரம், பொதுக்கூட்டத்திற்கு தொழிலாளர்கள் சென்றதால் பட்டாசு உற்பத்தி பாதித்த நிலையில் தற்போது ஆலைகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

சிவகாசி, சாத்துார் சட்டசபை தொகுதியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில் பிரதானமாக உள்ளது. இந்நிலையில் லோக்சபா தேர்தல் தமிழகத்தில் நேற்று முன்தினம் முடிந்தது. தேர்தலை முன்னிட்டு கட்சியினர் பொதுக்கூட்டம் பிரசாரத்திற்கு கூட்டத்தை சேர்ப்பதற்காக இந்த தொழிலாளர்களை தான் நாடினர். இதற்காக தொழிலாளர்களும் தங்கள் வேலையை விட்டுவிட்டு கூட்டத்திற்கு வந்தனர்.

வேலை செய்தால் கிடைக்கும் கூலியை விட கூட்டத்திற்கு கிடைக்கும் பணம் குறைவு தான் என்றாலும் கட்சியினரின் கூட்டத்திற்கு சென்று வந்தனர். ஒரு மாதமாக இந்த நிலை நீடித்ததால் பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில் உற்பத்தி பாதிக்கப்பட்டு உற்பத்தியாளர்கள் கவலையில் இருந்தனர். நேற்று முன்தினம் லோக்சபா தேர்தல் முடிந்தது.

இதனைத் தொடர்ந்து அனைத்து தொழிலாளர்களும் அவரவர் வேலைக்கு கிளம்பியதால் அனைத்து ஆலைகளும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

இனி வழக்கமான உற்பத்தி நடைபெறும் என்பதால் உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us