sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

கொட்டப்பட்டு வரும் குப்பை; அரிக்கப்படும் சர்வீஸ் ரோடு

/

கொட்டப்பட்டு வரும் குப்பை; அரிக்கப்படும் சர்வீஸ் ரோடு

கொட்டப்பட்டு வரும் குப்பை; அரிக்கப்படும் சர்வீஸ் ரோடு

கொட்டப்பட்டு வரும் குப்பை; அரிக்கப்படும் சர்வீஸ் ரோடு


ADDED : மே 13, 2024 12:36 AM

Google News

ADDED : மே 13, 2024 12:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகரில் குப்பை பாயின்டால் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டின் ஓரங்கள் அரிக்கப்படுகிறது. இதை தடுக்க வேண்டும்.

விருதுநகர் புல்லலக்கோட்டை ரோடு சந்திப்பு அருகே திறந்தநிலை வடிகால் அருகே குப்பை கொட்டப்படுவதால் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டின் ஓரம் அரிக்கப்பட்டு மெல்ல மெல்ல சேதம் அடைந்து வருகிறது. மாவட்டத்தின் நான்கு வழிச்சாலை ஓரங்களில் மரங்கள் வளர்க்கப்பட்ட காலம் போய், குப்பை பாயின்டுகள் பெருகி உள்ள காலமாகி விட்டது. இதனால் எங்கும், எதிலும் மாசு பரவி உள்ளது. மழைக்காலங்களில் பெய்யும் மழைநீரானது வடிகாலுக்கு செல்ல விடாமல் இது போன்ற குப்பை பாயின்டுகள் தடுத்து விடுகின்றன. குப்பையிலே நீர் தேங்கி சகதியும், சுகாதாரக் கேடுமாய் உள்ளது. தற்போது புல்லலக்கோட்டை ரோடு சந்திப்பு அருகே சர்வீஸ் ரோடு அரிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குப்பை பாயின்டை அகற்றி சர்வீஸ் ரோட்டை பலப்படுத்தி அரிப்பை தடுக்க வேண்டும். இல்லையெனில் இது சேதத்திற்கு வழிவகுக்கும்.






      Dinamalar
      Follow us