
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் மாணவர்களின் நற்பண்புகளை வளர்க்க நற்செயல் நாள் கொண்டாடப்பட்டது.
கல்லுாரியில் தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தங்களுக்கு வாழ்வில் உதவி செய்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நன்றி கடிதம் எழுதி தங்கள் நன்றியை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியை கல்லுாரியின் நிர்வாகம் சார்பாக கல்லுாரி முதல்வர் செந்தில் தலைமை வகித்து மாணவர்களை ஊக்குவித்து பேசினார்.