/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மதுபாட்டில்கள் விற்பனை அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்
/
மதுபாட்டில்கள் விற்பனை அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட்
ADDED : பிப் 28, 2025 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டிரைவராக பணியாற்றி வருபவர் ஆழ்வார் 52. இவர் நேற்று முன்தினம் ராணுவ வீரர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மதுபாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்ததாக ஸ்ரீவில்லிபுத்துார் மதுவிலக்கு போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 22 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் கைதான டிரைவர் ஆழ்வாரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக விருதுநகர் கோட்ட அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் துரைசாமி தெரிவித்தார்.

