
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் 75வது பட்டமளிப்பு விழா கல்லுாரி செயலாளர் சர்ப்பராஜன் தலைமையில் நடந்தது. இதில் கல்லுாரி முதல்வர் சாரதி, மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் (பொறுப்பு) பேராசிரியர் ராமகிருஷ்ணன், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
இதில் கல்லுாரி பரிபாலன சபைத் தலைவர் பழனிசாமி, உப தலைவர்கள் ராஜ்மோகன், ரம்யா, பொருளாளர் சக்திபாபு, கல்லுாரித் தேர்வுக்கட்டுபாட்டு அதிகாரி சக்திவேல், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் 670 இளநிலை, 277 முதுநிலை மாணவர்கள் பட்டம் பெற்றனர்.