sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்ட் கடைகளை அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

/

ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்ட் கடைகளை அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்ட் கடைகளை அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீவில்லிபுத்துார் பஸ் ஸ்டாண்ட் கடைகளை அகற்ற வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : மார் 15, 2025 04:57 AM

Google News

ADDED : மார் 15, 2025 04:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:' விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் தற்போதைய பழைய பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள தற்காலிக கடைகளை அகற்ற தாக்கலான வழக்கில், மனுவை அதிகாரிகள் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ஸ்ரீவில்லிபுத்துார் மாரியப்பன் தாக்கல் செய்த பொதுநல மனு:

ஸ்ரீவில்லிபுத்துார் மைய பகுதியில் பஸ் ஸ்டாண்ட் உள்ளது. இட வசதி பற்றாக்குறையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் மைய பகுதியில் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மேலும் இடையூறு ஏற்படுகிறது.

மாற்றாக ஸ்ரீவில்லிபுத்துார் -சிவகாசி மெயின் ரோட்டில் புது பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணி 80 சதவீதம் முடிந்துள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும். அதுவரை தற்போதைய பழைய பஸ் ஸ்டாண்டில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தற்காலிக கடைகளை அகற்றக்கோரி நகராட்சி நிர்வாக கமிஷனர், விருதுநகர் கலெக்டர், ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: மனுவை அதிகாரிகள் 12 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us