ADDED : செப் 08, 2024 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் இந்திய கம்யூ., சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையை மேம்படுத்துதல், பைபாஸ் சாலை அமைத்தல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
தாலுகா செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார்.
பேரூராட்சி தலைவர் தவமணி பெரியசாமி முன்னிலை வகித்தார்.
முன்னாள் எம்.பி. அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பொன்னு பாண்டியன் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் தாலுகா செயலாளர் கோவிந்தன், விவசாய சங்க மாவட்ட செயலாளர் சௌந்தர பாண்டியன், நகர செயலாளர் காளீஸ்வரன், ஒன்றிய குழு உறுப்பினர் பொன்மாரி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.